நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

விடியாத இரவொன்று

விடியாத இரவொன்று

விடியாத இரவொன்று விடைதேடி நிற்கிறது
முடியாத செயலதனை முடித்திடவே செய்கிறது
படியாத கல்வியினால் பயன்கூட இல்லையே
நடியாத நல்வாழ்வின் நல்லொளியும் பெருகிடுமே!

கடிகாரம் ஓடுகையில் காலமும் ஓடிடுமே
கண்போல காரியமும் கவனத்துடன் முடிந்திடுமே!
துடிப்போடு முயற்சியும் துளிர்விடுமே நாளை
தூண்டலுடன் முயல்வும் செய்திடும் வேளையிலே

விடியாத இரவென்று ஏதுமில்லை
விண்ணதிர ஒளியுமே தெரிந்திடும்
முடியாத முயற்சியும் முயன்றிட்டால்
முன்னேற்றம் துளிர்விடும் விடியலாய்

நகுலா சிவநாதன் 1753

Nada Mohan
Author: Nada Mohan