மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

“விடியாத இரவொன்று” ——————

கவிதை நேரம்-14.03.2024
கவி இலக்கம்-1839
“விடியாத இரவொன்று”
———————-
விடியும் விடியும் என்று
விழித்திருந்து காத்திருந்தோம்
விடியும் அந்த காலைப் பொழுது
விழிதனையே நாம் தொலைத்தோம்
ஊர் இழந்து உறவிழந்து
உடன் பிறப்பு தனையிழந்து
உயிரென சுமந்து வந்தோம்
உறவுகளால் நொந்தழுதோம்
அடைக்கலம் என அபயம் பெற்றோம்
அத்தனையும் சுமந்து வாழ்ந்தோம்
எம் உறவுகளால் நொந்து அழுதோம்
இன்றைய உறவுகளான இளையோர்
போதைக்கு அடிமையாகி அழிகின்றனர்
பெற்றோர் விடியாத இரவாக விழித்திருந்து
ஏங்கி அழுது மன நோயாளி ஆகின்றனரே
பாதை வழியில் சென்ற இளம் பெண்கள்
முற்றத்தில் விளையாடிய பிள்ளை
காமுகரின் வன்செயலால் ஆற்று ஓடையில்
வாள் வெட்டில் இளைஞர் பலி
இத்தனை அவலமும் எம்மிடையே
விடுதலைக்கு குரல் கொடுத்தால்
விதைத்தவனே வருவாய் விதைத்தவனும் நீயே
விடியும் உமதன்றோ விரைந்து வா
விடியாத இரவாக விடியலை தருவாயே

Nada Mohan
Author: Nada Mohan

பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading