பெண்ணே

செல்வி நித்தியானந்தன் பெண்ணே உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

விடியாத இரவொன்று..

வியாழன் கவி 1947..

விடியாத இரவொன்று…

விடியாத இரவொன்று
இங்கில்லை என்றே
நம்பிக்கை கொண்டு
நகரும் வாழ்வியலில்
மடியாத துயரில்ல
மாதவமே செய்தவராய்
யாசகமே கேட்கின்றோம்
நேசமுடன் வாழ்ந்திடுக..

பூசனைகள் தேவையில்லை
போதனைகள் தேவையில்லை
வேதனை தந்திடாதீர்
வென்றிடவே துணையாவீர்
மூத்தோரைப் பேணிடப்
பூத்ததொரு நாளிலே
நீத்தவர் போலவெண்ணாது
சேர்த்திணைத்து வாழ்ந்திட
விடியும் ஒரு பொழுதாகும்
வியந்தே தான் நோக்குவீர்..
சிவதர்சனி இராகவன்
14/3/2024

Nada Mohan
Author: Nada Mohan

பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading