முதியோரின் புலம்பல் 2169 ஜெயா நடேசன்

தவிக்கிறேன் தவிக்கிறேன் தனிமையில் மூலையில் முடங்கி கிடக்கும் நிலை கண் தெரியாத பாவியாகி விட்டேன் கைப்பிடித்து தெருவில்...

Continue reading

மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

விடியாத இரவொன்று…………

புலராத பொழுதொன்றின்
புலம்பல்களின். திரள்வுகளை
நிரப்பி நிறைத்து மௌனிக்கிறது
அழியாத. கோலங்களாய் அலங்கரித்து

ஓடும். பொழுது தனை கையகப்படுத்தாது
கனவுக்காலங்களின். காட்சித்திரட்சியுள்
வெற்றுக்காகிதமாய். வினாக்குறிகளை
தனக்குள் நிறைக்கின்ற அதி மேதாவியாய்

வாய்ப்பந்தல். போடுவதும் வாய்கிழியப் பேசுவதும்
செறிவார்ந்த செயல்களின்றி காயப்
புலம்பல்களின் கீறல்களை. ரசிப்பதுமாய்
வாழ்வுக் கோலத்தை கலைக்கும் மனிதர்களாய்

சிந்தனைக் கதவைத் திறக்காத இவர்கள்
வக்கணையாய்ப் பேசும் வல்ல சீவன்கள்
வடிவமைக்கத்தெரியாத புல்லுருவிகள்
ஆம்விடியாத இரவுகளின் வீணான. பித்தர்கள்

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் அன்னை தரணியில் தாய்க்கு நிகர்யாதும் உண்டோ தற்பெருமை இல்லா காத்திட்ட தெய்வம் அழகுபெற்ற வதனம் பழகுவதும் உறவாய் அன்பிலே இருப்பிடம் பண்பிலே மேலானவர் எட்டுமகவுகள்...

Continue reading

வசந்தா ஜெகதீசன் மூத்தோர்... உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள் உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள் தளர்ந்தே இன்று தள்ளாடும்...

Continue reading