விடைபெறுகிறாயே கோடையே

சிவதர்சனி

வியாழன் கவி-2025

விடைபெறுகிறாயோ
கோடையே…!!!

விருப்பின்றி அனுப்புகிறோம்-நீ
விருப்போடு செல்லுகிறாய்
தடுப்பாரின்றி அழுகிறோம்
நீ தடை என்றே செல்லுகிறாய்..

சுட்டுவிடும் சூரிய ஒளியும்
இனி இல்லை இங்கே
சுகமாய்த் தாலாட்டும் இதமான
தென்றலும் இனி இங்கே இல்லை..

வண்ண வண்ணப் பூக்களும்
கண்ணில் தென்படா
வாசம் தந்து எனை ஈர்க்கும்
எண்ணமும் உன்னிடம் இல்லை..

கோடி சுகம் தந்த கோடை
நீ விடை பெற்றுச் செல்ல
நான் கண்ணீரோடு மெல்ல
விடையனுப்பி வைக்கிறேன்..
சிவதர்சனி இராகவன்
12/9/2024

Nada Mohan
Author: Nada Mohan