” தண்ணீருக்காய் திரளும் போர்மேகங்கள் “

ரஜனி அன்ரன் (B.A)26.03.2026...தண்ணீருக்காய் திரளும்..... போர்க்கால மேகங்கள் புடைசூழ கார்கால மேகமாய் கரும்புகையாய் வானம் தண்ணீருக்காய்...

Continue reading

தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள்

நகுலா சிவநாதன் தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள் கார் கால மழைமேகம் கண்ணிமைக்கும் நேரத்திலும் போர் மேகம் சூழ்ந்தாலும் வாரியிறைக்கும்...

Continue reading

விடைபெறுகிறாயே கோடையே

சிவதர்சனி

வியாழன் கவி-2025

விடைபெறுகிறாயோ
கோடையே…!!!

விருப்பின்றி அனுப்புகிறோம்-நீ
விருப்போடு செல்லுகிறாய்
தடுப்பாரின்றி அழுகிறோம்
நீ தடை என்றே செல்லுகிறாய்..

சுட்டுவிடும் சூரிய ஒளியும்
இனி இல்லை இங்கே
சுகமாய்த் தாலாட்டும் இதமான
தென்றலும் இனி இங்கே இல்லை..

வண்ண வண்ணப் பூக்களும்
கண்ணில் தென்படா
வாசம் தந்து எனை ஈர்க்கும்
எண்ணமும் உன்னிடம் இல்லை..

கோடி சுகம் தந்த கோடை
நீ விடை பெற்றுச் செல்ல
நான் கண்ணீரோடு மெல்ல
விடையனுப்பி வைக்கிறேன்..
சிவதர்சனி இராகவன்
12/9/2024

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் அன்பில் உயர்ந்த பிறப்பிடம் ஆதரவில் பதிந்த சிறப்பிடம் இனிமை உதித்த தரிப்பிடம் ஈரேழு ஜென்மும் போற்றும் உலகத்தோரின்...

Continue reading