மறக்கமுடியுமா மே 18

ராணி சம்பந்தர் முள்ளிவாய்க்கால் முனகலிலே இன்னும் எம் காதினில் ஒலிக்க மூச்சுப் பேச்சின்றி உயிருடனே மூடிய கிடங்கிலே அடங்கியதே துள்ளிக்...

Continue reading

விரல் நுணியில் அறிவியல்

கெங்கா ஸ்ரன்லி

ஆன்றோர் அளந்து வைத்த அறிவியல்
இன்று விஞ்ஞான ஆய்வு கண்டுபிடிக்கிறது
அன்று எப்படிக் கண்டுபிடித்தார் இதை
என்றாவது சிந்தித்தோமா முன்பு
உலகின் மையமே நடராஐரின்
பாத நுணிவிரலில் என்றால்
எவ்வளவு நுண்ணறிவு உடையவர்
நம் முன்னோர்கள்
அணுகூட சிறிதென்று
ஓளவை கூறினாரே
இப்பொழுது தானே இவையெல்லாம்
விஞ்ஞான அறிவியலில்
வெளிப்படை யாச்சு
அன்று மெய்ஞானத்துடன் விஞ்ஞானமும்
பின்னிப் பிணைந்திருந்ததால்
அறிவியல் சிறந்து விளங்கியது
இன்றும் இன்னமும் கண்டுபிடிக்கும்
அண்டங்கள் கிரகங்கள்
அன்றே எம்மவர் கூறிய அறிவியலே
ஆக எம் முன்னோரது
அறிவியல் சக்தி அளப்பரியதன்றோ
அதுவே விரல நுணியில் இருந்திருக்கலாமோ!

Nada Mohan
Author: Nada Mohan