வேலாயுதர் இராசலிங்கம்

நினைவுநாள்;;

நினைவுநாள் நிகழ்வுக் குண்டு
நிலவுநாள் குளுமைக் குண்டு
கனவுநாள் மகிமைக் குண்டு
கனதிநாள் கருத்துக் குண்டு
மனதுநாள் மதிப்புக் குண்டு
மகிழ்ச்சிநாள் இருப்புக் குண்டு
உனதுநாள் வியப்புக் குண்டு
உன்னத படைப்புக் குண்டு !

வத்திரம் உடுக்கும் நாளே
மாவலம் அடுக்கும் நாளே
ஒத்தடம் எடுக்கும் நாளே
உள்ளமும் களிக்கும் நாளே
அத்திரம் பறக்கும் நாளே
அம்புகள் பிறக்கும் நாளே
முத்தமிழ் செழிக்கும் நாளே
முன்வயம் ஒளிரும் நாளே !

கனலியே எதிர்கொண் டாற்போல்
காற்சிலம் பதிர்தல் போலாம்
அனலிடைத் தோய்ந்த மாது
அறமெனக் குரைத்தல் மேலாம்
சினமென வைகுஞ் செவ்வேள்
செந்தமிழ்க் கரங்கள் கோலாம்
புனலிடை மழையென் றாகிப்
பேசிடும் அறங்க ளாகும் !

எத்தனை யுகம்போ னாலும்
எத்தனை வதம்போ னாலும்
சித்திரம் அனைய செந்தேன்
சீருடை அணிந்த அன்னை
பத்திரம் புனையு மட்டும்
பரிட்சய மாகும் சட்டம்
வித்தென அமையு மட்டும்
விழியென இருப்பாள் அம்மா !

வேலாயுதர் இராசலிங்கம்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading