” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

அது. ஒரு கனாக்காலம்

இரா.விஜயகௌரி
விழிக்குள் மொழி பேசி
வியந்து தினம் மலர்ந்து
மலருக்குள் இதழாய் நின்று
மகிழ்ந்தெழுந்த பொற்காலம்

பதின்ம வயதெழுதி எங்கள்
பழகும் உறவிழைந்து -தினம்
தென்றலின் சிறகசைக்க விரிந்த
தெவிட்டாத கற்காலம்

துன்பத்தின் பேரலையை -நாம்
தூர எறிந்து வந்தோம்
வனப்பின் தெறிப்பறிந்து
வண்ணத்துப் பூச்சியானோம்

துள்ளி. மனம் மகிழ்ந்து
புள்ளி மான் கூட்டங்களாய் அன்று
கள்ளம் கபடமற்ற அந்த
காவியத்தின் எழில் பருவம்

ஆம் வாழ்வின் சிறு பருவம்
வனப்பின் எழில் தொடுகை
எதையும் முடித்தே வெல்லும் -அது
ஓர் கனவின் காலமென்பேன்

Nada Mohan
Author: Nada Mohan