அது ஒரு கனாக்காலம் (723)

அது ஒரு கனாக்காலம் Selvi Nithianandan

அறியாத வயது
புரியாத போது
தெரியாதநோயால்
இழந்தேனே தந்தை

கஷ்டம் என்பது
எம்மை துரத்த
கண்ணீர் சொட்ட
கவலையை நிறுத்த
மெளனமே காத்த
மங்கையாய் நானும்

மண்குடிசை வாழ்வு
மகிழ்ச்சியே அன்று
மண்ணை இழந்து
தனித்து இன்று

வசதிகள் இன்று
அசதியும் அதிகம்
காலமும் மாறி
கோலமும் இழந்ததே மிச்சம்

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

Continue reading

சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

Continue reading