கனவுப் பயணம்

சக்தி சிறினிசங்கர் விழி மூடித் தூங்குகையில்பயணிக்கின்றேன் தொலைதூரம் வழிநெடுக வயல்வெளிகள் வயல்வெளி யாவும் பச்சைப் பசேலென விரிந்து கண்களைக்...

Continue reading

கனவுப்பயணம்……

ரஜனி அன்ரன் (B.A) ....கனவுப்பயணம்..... 07.05.2026 கற்பனைச் சிறகைவிரித்து கனவுகளில் மிதந்து எழுத்துக்களின் தோப்பில் தொலைந்து எண்ணங்களின்...

Continue reading

“அது ஒரு கனாக் காலம்”

நேவிஸ்பிலிப் கவி இல(477)

சின்னஞ்சிறு வயதினிலே
சித்திரமாய் நினைவினிலே
வாழ்க்கையின் சுகந்தமெல்லாம்
வர்ணக் கனவுகளின் கலவையிலே

அந்த நாளை நினைச்சாலே
எடுப்பாத்தான் எனக்கிருக்கு
கடலலையின் தாலாட்டுடன்
ஆலய மணி ஒசை
ஊரையே உசுப்பி விடும்

காலங்காத்தால
வெள்ளெனதான் விழித்தெழுந்து
பனங்காணி நடந்து சென்று
பனம்பழம் பொறுக்கியதும்

மழைக்காலம் வந்தாலே
விரைந்தோடி காட்டுக்குள்ளே
நாவல் பழம் துவரம் பழம்
துவடிப் பழம் காரப்பழம்
பறித்துண்ட ஞாபகமும்

என்னோட தம்பி தங்கை
என் வயது தோழியரும்
சுற்றத்து குட்டிகளும்கூடி
கூட்டான் சோறு சமைத்ததும்
அதெல்லாம் கனாக் காலமாய்

கிராமத்து வனப்பு எல்லாம்
கனவில் கண்ட காட்சியாய்
நாகரீக நாட்டத்திலே
மங்கியே மறைஞ்சு போச்சு..
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

Continue reading