ஆத்மராகங்கள்

சக்தி சிறினிசங்கர் தமிழ்மணம் கமழும் தேசத்தை நேசித்த நெஞ்சங்களில் சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில் துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க மறந்தனர்...

Continue reading

அந்திப்பொழுது

அந்திப்பொழுது Selvi Nithianandan
சாயக்காலம் வந்திடும் நேரம்
சாய்மனை கதிரையில் சரிந்து
சண்டை போட்டு முந்தியும்
சாப்பாடு உண்டதொரு காலம்

உறவுகள் நண்பர் கூடியும்
உருட்டி விளையாடிய தாயமும்
வெருட்டி பேசிய பேச்சும்
வெட்கம் நினைத்தால் வரும்

அந்திசாயம் வந்த மழையும்
அடங்கிடாது பொழிந்து தள்ளும்
மந்திபோல் குந்திய நினைவும்
மண்ணின் நினைவு வாட்டும்

Author:

வசந்தா ஜெகதீசன் கல்லறைகள் திறக்கும்..... விடுதலை வேட்கையும் வீரத்தின் உணர்வும் ஓன்றித்த போர்க்காலம் ஓயாத அலை போல அவலமும் அழிவும்...

Continue reading