மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு……

இரா விஜயகௌரி இனிதாம் வாழ்வியல் பயணத்தொடரில் இடரெனச் சூழ்ந்திடும் நோயின் தொடுப்பு காற்றினில் மூச்சாய் கலந்திடும் கிருமி உள்துளைபுகுந்து...

Continue reading

அபிராமி கவிதாசன்

சந்தம் சிந்தும் சந்திப்புக்காக…

“உழவும் தொழிலும்”

உழவுக்கும் தொழிலுக்கும்
உரித்தில்லா தேசத்தில்
உரிமைக்குரல் ஒன்று
உருகுதே ஊமையாய்..

சுட்டமண் தேசத்தில்
சுகந்தமாம் இயற்கைவளம்
சுதந்திரமாய் விவசாயம்
சுவர்க்கமன்றோ தாய்நாடு..

ஆற்றுநீரல் நீராடி
ஆனந்தமாய் அரிசிகோலமிட்டு
ஆர்பரித்து ஆனந்தமாய்
ஆசிபெற்ற ஞாபகமும்
நெஞ்சோடு..

பச்சரிசி அறுவடையும்
பல்வகை காய்கனியும்
படையலிட்டு நன்றிகூறி
பகலவனுக்கு படைத்ததை
மறவேனோ…

இயற்கைக்கு நன்றிகூறும்
இந்நாளே பொன்னாளாம்
இல்லத்தில் செல்வம் பொங்க
இறைவா வணங்குகிறேன் ..

மிக்க மிக்க நன்றி 🙏
பாவை அண்ணா.

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading