28
May
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
28
May
கரைதலும் புரிதலும்……..
இரா.விஜயகௌரி
கரைகின்ற கணங்களுக்குள்
உறைகின்ற வாழ்வை -நாம்
கணமேனும் சிந்தித்து
நிலைத்தோமா நொடியாய்
விரைகின்ற மணித்துளிகள்
உரசி எழும் செயலால்
கரைகின்ற கணங்களுக்குள்
காத்திரமாய்...
28
May
வாழ்க்கையின் அர்த்தம்
வெறும் நாட்களின் நகர்வா வாழ்க்கை
நினைவுகளை உற்பத்திசெய்யும் உள்ளத்தின் நெடிய பயணம்
ஒவ்வொரு...
அபிராமி கவிதாசன்.
கவிஇலக்கம் -165. 17.03.2022
“வாழ்த்திட வந்தேன் மகனே “
என்றன் மடிதனில் மலர்ந்த மகவே
உன்றனை போற்றி வாழ்த்திடவே வந்தேன்
கட்டி என்னில் முத்தம் பதிப்பாய்
கரும்பாய்பேசி கருத்தாய் ஆழ்வாய்
சுட்டி செய்தே சுற்ற வைப்பாய்
சுகமாய் அன்பை உணர்த்திட வைந்தாய்
கண்ணை கட்டி தேட வைப்பாய்
கண்ணில் பட்டு கரும்பாய் நகைப்பாய்
தர்க்கம் செய்து தட்டணை பெறுவாய்
சொர்க்கம் சேர்வாய் சொந்தம் சேர
நட்புடன் ஆட நாட்திசை ஓடி
திட்டம் போட்டு தீர்ப்பும் தருவாய்
பாமுக குழந்தையாய் பல்கலை புரிவாய்
பூமுகம் மலர புத்துணர்வு அளிப்பாய்
வள்ளுவன் பேரினை வாகை சூட்டியே
தெள்ளு தமிழை தெவிட்டாது உரைப்பாய்
அப்பா செல்லம் அன்பில் குறும்பு
அம்மா சொல்லை ஆராதனை செய்வாய்
இல்லக் குறும்பை இனிதாய் படைத்தேன்
செல்ல மகனே செவிதனில் ஏற்பாய்
அன்புடன்
அப்பா அம்மா 🙏💖
Author: Nada Mohan
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...
25
May
செல்வி நித்தியானந்தன் அங்கீகாரம்
எமக்காய் கிடைக்கும்
உன்னதமான விருது
எண்ணியே எந்நாளும்
உவகையாய்...