ஆளுகின்றான் அடிபணிகின்றோம்..!!

வியாழன்கவி 2300!! ஆளுகின்றான் அடிபணிகிறோம்!! வாழுகின்ற வாழ்க்கையிலே வழி நெடுக பயணிப்பான் ஆளுகின்ற அழுத்தக்காரன் வீழ்ந்திடுவான் உழைப்பாலே சோம்பலென்று கிடந்தாலோ தூரம்...

Continue reading

வரமாகும் வாய்ப்புக்களே

இரா.விஜயகௌரி வரமாகும் வாய்ப்புக்கள் அவை தடமாகும் செயல் தழுவின் உரமாய் நாம் பயன்கொள்ளின் உரைத்தெழுதும் நம் தடங்கள் வாய்த்ததெல்லாம்...

Continue reading

அபிராமி கவிதாசன்

சந்தம் சிந்தும்
சந்திப்பு வாரம்-247

சிரிப்பு
….
வான்முகில்கள் மோதலிலே
வெடிச்சிரிப்பு – இரு
வல்லரசுகள் மோதலிலே -ஏவு
கணைச் சிரிப்பு!

தேன்இதழ்கள் மோதலிலே
காதல் சிரிப்பு-அந்த
இயற்கைமகள் பார்வையிலே
அழகின் சிரிப்பு!

கருங்குயில்கள்வாய் திறந்தால்
இசைச்சிரிப்பு-மொட்டு
மலர்விரிப்பில் தோன்றுவதோ
பூஞ்சிரிப்பு!

மழலையர் புன்னகையில்
மலர்வதோ-அந்த
மாயவனாம் எம்கடவுள்
கண்ணனின் சிரிப்பு!

என்மகன் கவிதனின்
குரலோசையிலோ – திரு
வள்ளுவரின் வாய்மொழியாம் தமிழமுதக்குறள் சிரிப்பு!

சந்தேகப்பேர்வழிகள்
உதட்டினிலே எப்பொழுதும்-தோன்றும்காண்
அகந்தையெனும் ஆணவச் சிரிப்பு!

தேசியத் தலைவரை
நேசிப்பவர் முகத்தினிலே – மலரும்
அன்பின் உருவான
தாயின் சிரிப்பு!

எங்கள் மக்கள் ஒருங்கிணைப்பில்
விடியும் பார்-ஈழ
தேசத்தின் விடுதலைச் சிரிப்பு!

தேன்இதழ்கள் மோதலிலே
காதல் சிரிப்பு-அந்த
இயற்கைமகள் பார்வையிலே
அழகின் சிரிப்பு!

அபிராமி கவிதாசன்
02.01.2024

Nada Mohan
Author: Nada Mohan