அபிராமி கவிதாசன்

சந்தம் சிந்தும்
சந்திப்பு வாரம்-247

சிரிப்பு
….
வான்முகில்கள் மோதலிலே
வெடிச்சிரிப்பு – இரு
வல்லரசுகள் மோதலிலே -ஏவு
கணைச் சிரிப்பு!

தேன்இதழ்கள் மோதலிலே
காதல் சிரிப்பு-அந்த
இயற்கைமகள் பார்வையிலே
அழகின் சிரிப்பு!

கருங்குயில்கள்வாய் திறந்தால்
இசைச்சிரிப்பு-மொட்டு
மலர்விரிப்பில் தோன்றுவதோ
பூஞ்சிரிப்பு!

மழலையர் புன்னகையில்
மலர்வதோ-அந்த
மாயவனாம் எம்கடவுள்
கண்ணனின் சிரிப்பு!

என்மகன் கவிதனின்
குரலோசையிலோ – திரு
வள்ளுவரின் வாய்மொழியாம் தமிழமுதக்குறள் சிரிப்பு!

சந்தேகப்பேர்வழிகள்
உதட்டினிலே எப்பொழுதும்-தோன்றும்காண்
அகந்தையெனும் ஆணவச் சிரிப்பு!

தேசியத் தலைவரை
நேசிப்பவர் முகத்தினிலே – மலரும்
அன்பின் உருவான
தாயின் சிரிப்பு!

எங்கள் மக்கள் ஒருங்கிணைப்பில்
விடியும் பார்-ஈழ
தேசத்தின் விடுதலைச் சிரிப்பு!

தேன்இதழ்கள் மோதலிலே
காதல் சிரிப்பு-அந்த
இயற்கைமகள் பார்வையிலே
அழகின் சிரிப்பு!

அபிராமி கவிதாசன்
02.01.2024

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

    Continue reading