மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு……

இரா விஜயகௌரி இனிதாம் வாழ்வியல் பயணத்தொடரில் இடரெனச் சூழ்ந்திடும் நோயின் தொடுப்பு காற்றினில் மூச்சாய் கலந்திடும் கிருமி உள்துளைபுகுந்து...

Continue reading

அபிராமி கவிதாசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்_264,

விருப்புத் தலைப்பு!

“தந்தையின் தவிப்பு”

பெருந்தமிழர்
பாவை ஜெயபாலன்
திருமதி கமலா
ஜெயபாலன்
வாழ்விணையர்
பெற்ற மகள்!
யெனி – எனும் – தேன்
கனியின் நகர்வும்
என் கவிதையின்
பகர்வும்
இதோ!

செந்தமிழ்த் தேன்மொழி
சிந்திடும் பைங்கிளி
மகளே- எங்கள்
உயிரே – அயல்
மனை புகுந்திடும்
அழகே – தூய
மலரே- அன்பினில்
விளைந்த முத்தே!

விழிமலர் நனைந்திட
வைத்தாய் – என்
நெஞ்சம் பதைத்திட
உருகிட விடை நீ
கொடுத்தாய் – தந்தை
சிந்தையில் ஆயிரம்
கனவுகள் மலரவே விதைத்தாய் – இன்று
நின்றன்- பிரிவினால்
என்னையே கொன்றாய் – அனிச்சப்
பூவினும்
மெல்லிய கன்னத்தில்
கொஞ்சிட சிரித்தாய்
உன் – மனத்தினில்
என்னையே பதித்தாய் – தங்கப்
படிவமாய்த் திரும்பியே
நடப்பாய் – இல்லறம்
சிறக்கவே – நல் திருக்குறள் நெறியைக்
கடைப்பிடிப்பாய்!

சாயல்மயில்
பேடையெனச் செல்வாய் – வாழ்வில்
யாவும் வெல்வாய்!
என்று வாழ்த்தியது
தந்தையின் மனமே
இக்கணமே!

-அபிராமி கவிதாசன்.
07.05.2024

e

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading