பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

அப்பா

ஜெபா ஸ்ரீதெய்வீகன்

அனைவருக்கும் வணக்கம்🙏
வியாழன் கவிதை
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-28
16-05-2024

அப்பா (6 வது வருடம்)

ஆண்டு ஆறு ஓடி மறைந்தாலும்
நீண்ட ஆறாத் துயரம்
மீண்டு வராதோ உங்கள் பாசம்
வேண்டி ஏங்கி நிற்கின்றோம்.

பாசம் பொழிந்த கைகளும்
நேசம் கொண்ட வார்த்தைகளும்
நெஞ்சம் நிறைந்த நேர்மையும்
வஞ்சமில்லா ஈரநெஞ்சமும்

தருணமறிந்து தர்க்கம் விலக்கி
அருளும் அறிவும் எழுந்த ஆளுமையும் அன்னைக்கு நிகரான அன்பின் பெருமை…! மனதிற்குள் இன்னும் வலிக்குதப்பா.

அத்தனை உறவுகள் அருகிருந்தும்
பித்தன் போல் காலனவன்
காவிச் சென்றது கண்ணுக்குள்
இன்னும் நிற்குதப்பா…..

மீண்டுமொரு பிறப்புண்டேல்
வேண்டும் எம் தந்தையாய்
நாண்டி நிற்கின்றோம்.
ஓம் சாந்தி, ஓம் சாந்தி, ஓம் சாந்தி!

நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.

Nada Mohan
Author: Nada Mohan

அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

Continue reading