அப்பா

ஜெபா ஸ்ரீதெய்வீகன்

அனைவருக்கும் வணக்கம்🙏
வியாழன் கவிதை
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-28
16-05-2024

அப்பா (6 வது வருடம்)

ஆண்டு ஆறு ஓடி மறைந்தாலும்
நீண்ட ஆறாத் துயரம்
மீண்டு வராதோ உங்கள் பாசம்
வேண்டி ஏங்கி நிற்கின்றோம்.

பாசம் பொழிந்த கைகளும்
நேசம் கொண்ட வார்த்தைகளும்
நெஞ்சம் நிறைந்த நேர்மையும்
வஞ்சமில்லா ஈரநெஞ்சமும்

தருணமறிந்து தர்க்கம் விலக்கி
அருளும் அறிவும் எழுந்த ஆளுமையும் அன்னைக்கு நிகரான அன்பின் பெருமை…! மனதிற்குள் இன்னும் வலிக்குதப்பா.

அத்தனை உறவுகள் அருகிருந்தும்
பித்தன் போல் காலனவன்
காவிச் சென்றது கண்ணுக்குள்
இன்னும் நிற்குதப்பா…..

மீண்டுமொரு பிறப்புண்டேல்
வேண்டும் எம் தந்தையாய்
நாண்டி நிற்கின்றோம்.
ஓம் சாந்தி, ஓம் சாந்தி, ஓம் சாந்தி!

நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

Continue reading

வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

Continue reading