அவளில்லை. இன்று……..

என் வீட்டில் அத்தனையும்
நித்தமுமாய் நித்தமுமாய் பளபளக்கும்
தூசி. கிடையாது துலங்கும் பாத்திரங்கள்
அட எத்தனை வசதியாய் இவ்விடம்

ஒரு வாரம் ஒரே வாரம் அவளில்லை
உணவில்லை உயிர்ப்பில்லை
அதட்டும் குரலில்லை ஆரவாரமில்லை
கேட்பாருமில்லை. முடங்கின அத்தனையும்

ஓ அவள்தான் அத்தனையுமாய் இருந்தாளோ
நோவினில் களைப்பினில்-தினம்
ஓடி ஓடி நொடித்தவள் உதவிக்கரம் தேடி
காத்திருந்திருப்பாளோ. உணராமல்நாம்

மெல்ல உறைத்தது பசியினால் வலித்தது
அவள் அமிழ்தினைத் தேடிய உணர்வு
அவள் இயந்திர ஓட்டத்தில் தான் அனைத்துமோ
புரிந்ததும் வலிக்கிறது ஆனால்

தூசி படிந்த தளத்தில் துயரின் சுமை நிறைத்து
ஆம் அவளின்றி கனக்கிறது மனது
அவளைச் சுமந்தபடி………..,..

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

Continue reading