” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

இன்றைய மனிதர்

ஜெயம் தங்கராஜா

காலத்தின் போக்கில் வாழ்க்கை செல்கின்றது
ஞாலமும் புதிதாய் மாற்றத்தைக் கொள்கின்றது
பாசமும் நேசமும் பணத்துக்காய் என்றானது
வேஷமும் வாழ்வும் ஒன்றுடன் ஒன்றானது

தனக்காக வாழுக்கின்ற குறுகிய எண்ணம்
கணக்கோடு வாழுக்கின்ற நவீனத்தின் வண்ணம்
இரக்கம் என்பது சொல்லளவில் மட்டுமே
தரமற்ற செயல்களும் வாழ்க்கையை கட்டுமே

பார்த்தும் பார்க்காதுபோல் கண்டுகொள்ளா நகர்வு
சேர்ந்தும் சேராத ஒட்டாததோர் உறவு
இப்போதெல்லாம் நடிப்பு வாழ்க்கையின் அங்கமாகிவிட்டது
எப்போதெல்லாம் தேவையோ உச்சத்தை எட்டுது

கண்டால் யாரோ காணவிட்டால் யாரோ
உண்டவீட்டிற்கே துரோகம் செய்யுமிவர் யாரோ
மனச்சாட்சி இல்லாத புதியதோர் பழக்கம்
தனக்குத் தனக்கெனவே மாற்றிக்கொண்டார் இலக்கும்

Nada Mohan
Author: Nada Mohan