“இயற்கையின் வரமே… இதுவும் கொடையே”

ரஜனி அன்ரன் (B.A)“ இயற்கையின் வரமே… இதுவும் கொடையே “ 16.10.2025

நீலவானம் நிறைந்தபூமி பரந்தகடல்
விரிந்தகுடா உயர்ந்தமலைகள் மரஞ்செடிகொடி
அத்தனையும் இயற்கையின் கொடையே
இலையுதிர்காலம் இயற்கையின் வரமே
இலைகள் விழும்ஓசை உலகின் இசையே !

பசுமை மரங்கள் பழைய ஆடையகற்றி
புதுமையை வரவேற்க தயாராகுது
இலைகள் உதிர்வது முடிவல்ல
புதிய கிளைகள் பிறக்கும் முன்னுரையது
இயற்கை நமக்கு கற்பிக்கும் பாடமது
விழுவதுதான் எழுகைக்கான வேதமிது !

மஞ்சள்சிவப்பு வண்ணம்பூசி மரங்கள்மலர
மழைத்துளிகளும் தென்றல்காற்றில் தாலாட்டுப்பாட
பூமித்தாயும் சில்லென்று சிலிர்க்கும் சிங்காரக்காலம்
இலையுதிர்காலம் நம்பிக்கையின் சின்னம்
இயற்கை சொல்லும் வாழ்க்கைப் பாடம்
இயற்கையின் வரமே இதுஇயற்கையின் கொடையே !

ஜெயம் இன்பத்திலும் துன்பத்திலும் பக்கபலமாக இருப்பார் ஒன்றுக்கொண்று நம்பிக்கையின் உறவேனவே இருப்பார் எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் மரியாதை...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பேரிடர்.. இயற்கை அனர்த்தம் பாதிப்பாய் இயல்பு வாழ்வு மாற்றமாய் அவலம் சூழ்ந்த பொழுதுகள் யாரும் யாருக்கும் உதவாது உயிரின்...

Continue reading