16
Oct
அபி அபிஷா
நீலநிற ஆடையில் வெண் படலங்களைப் போல் மேகங்கள்
பூக்களில் தவழும் யேனை...
16
Oct
இயற்கை வரமே இதுவும் கொடையே
-
By
- 0 comments
ஜெயம்
வருங்கால சந்ததிக்கு சேர்த்து வைப்பது எதை
பருகிட உண்டிட தருகின்ற இயற்கை அதை
நீர் நிலம்...
16
Oct
“இயற்கையின் வரமே… இதுவும் கொடையே”
ரஜனி அன்ரன் (B.A)“ இயற்கையின் வரமே... இதுவும் கொடையே “ 16.10.2025
நீலவானம்...
“இயற்கையின் வரமே… இதுவும் கொடையே”
ரஜனி அன்ரன் (B.A)“ இயற்கையின் வரமே… இதுவும் கொடையே “ 16.10.2025
நீலவானம் நிறைந்தபூமி பரந்தகடல்
விரிந்தகுடா உயர்ந்தமலைகள் மரஞ்செடிகொடி
அத்தனையும் இயற்கையின் கொடையே
இலையுதிர்காலம் இயற்கையின் வரமே
இலைகள் விழும்ஓசை உலகின் இசையே !
பசுமை மரங்கள் பழைய ஆடையகற்றி
புதுமையை வரவேற்க தயாராகுது
இலைகள் உதிர்வது முடிவல்ல
புதிய கிளைகள் பிறக்கும் முன்னுரையது
இயற்கை நமக்கு கற்பிக்கும் பாடமது
விழுவதுதான் எழுகைக்கான வேதமிது !
மஞ்சள்சிவப்பு வண்ணம்பூசி மரங்கள்மலர
மழைத்துளிகளும் தென்றல்காற்றில் தாலாட்டுப்பாட
பூமித்தாயும் சில்லென்று சிலிர்க்கும் சிங்காரக்காலம்
இலையுதிர்காலம் நம்பிக்கையின் சின்னம்
இயற்கை சொல்லும் வாழ்க்கைப் பாடம்
இயற்கையின் வரமே இதுஇயற்கையின் கொடையே !

Author: ரஜனி அன்ரன்
16
Oct
-
By
- 0 comments
அந்திப்பொழுது Selvi Nithianandan
சாயக்காலம் வந்திடும் நேரம்
சாய்மனை கதிரையில் சரிந்து
சண்டை போட்டு...
15
Oct
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
அந்தி நேரம் அடிப் பந்தியிலே
குந்தியிருந்த ஒளிக்கற்றையை
அடுக்கிக் கொண்டிருந்த வேளை
அது சரி உனக்கு...
14
Oct
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
14-10-2025
கதைகள் பல கோர்த்து,
கதாபாத்திரங்களாய் உயிர்ப்பித்து,
அரங்கில் பலர் கூடுகையில்
அகம் மகிழக் கதை...