மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

இராவிஜயகௌரி

மீண்டெழும் கனவுகளை
மாண்டெழும் பொழுதுகள் துரத்தி
கொண்டெழும் வீரியக் கணத்தால்
வென்றெழும் நொடிகளோ. இவை

ஆம் திசைகள் தோறும் சிதறிப் போனோம்
சேரிடம் அறியா சேய்களாய் தொலைந்தொம்
பாரிடம்எங்கள்புகலிடம் கேட்டோம்
பட்டிகள்தொட்டிகள் வாழ்விடம் நிலைத்தொம்

அறிவை மூட்டை கட்டிய நொடிகள்
அகதிகள் குழியில்தேடலின் எச்சம்
தாழ்வைத் தாங்கிய. மனங்களின் சுமைகள்
பணமே எங்கள் குறிக்கோள். வாழ்வு

ஓடிய நொடிகளில் மூப்பும் கனிய
தலை நிமிர்ந்த நொடியில்அட வெள்ளியின் பிடியில்
மீண்டு எழுவோம். மீதியை. நிறைக்க
விட்டவை தொட்டவை வெளிகளை. நிரப்ப

ஏதிலி மனித இழிவினைக் கலைத்து
நாடிடும் பொழுதினை நயமுற விதைத்து
இணைந்திடும். உறவே. ஏற்றவை படைக்க
வாழ்வின் நொடிகள் விரையுது. உணர்வாய்

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading