தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

இரா.விஜயகௌரி

கனவுச்சாலை…………

விடியும். பொழுதுகளை
கனவுச் சுமை தாங்கி நிதம்
நினைவுப் பொதி சுமந்த
கழுதைகளாய். நகர்கின்றோம்

அழுத்தும் பெரும் சுமைகள்
அயர்ச்சிப் பணிச்சிலந்தி
அமுக்கும் பெரும் கடன்கள்
அனைத்தும் நம் தோளில்

விலக்க. நினைத்தாலும். இவை
விலகா. தோழர்களாய்
நாளைப் பொழுதுக்காய்
இன்றைத்தொலைத்தோடுகின்றோம்

வாழ்ந்த. பொழுதேது. நாம்
மகிழ்ந்தெழுதும். கணமேது
அலைந்து. களைத்து. மனம்
அயர்வின் தொடுபுள்ளி. தானேது

எமக்கேன் அமைதியில்லை
கனவுச்சாலைகளில். நாம் நிதமும்
புரவிச். சவாரிகளில். -எம்
புதையலைத். தொலைக்கின்றோம்

நிறைவைக். கொண்டெழுவோம்
விரவிக். கரம் இழைவோம்
உறவுப். பின்னலிலே. எம்
உயர்வின். வெற்றி கொள்வோம்

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

    Continue reading