நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

வேண்டாத போரும் தீண்டாத பழியும்

நகுலா சிவநாதன்
வேண்டாத போரும் தீண்டாத பழியும்

வளைகுடா யுத்தம் வாட்டுது மக்களை
தலையெடுத்து வாழத் தடையாக இருக்குதே!
நீநான் போட்டி நிலைக்குமா? என்றும்
நீதியும் இன்றி நேர்மையுமின்றி
நிர்மூலமாகும் நகர அழிவுகள்.

வேண்டாத போரும் தீண்டாத பழியும்
பூண்டிருக்கும் வேடம் புதுப்புது அர்த்தம்
வாழக் காத்திருக்கும் மக்கள் விழிகள்
சோர்ந்திருக்கும் நிலையை யார்தான் எண்ணுவார்?

அதிருது கட்டிடம் அடைமழையாய் குண்டுகள்
பதியும் தரைமட்டம் பலரும் அவலக்குரல்
புதிரும் போட்டு ஆட்டமும் தொடருது
வதியும் இடங்கள் வரலாறாய் பதியுது

எரிபொருளும் எண்ணெயும் அழியுது அங்கு
ஏமாற்றம் பலருக்கு வாழ்வே போராட்டம்
பயணங்கள் தடையாகுது பயணிகள் ஏமாற்றம்
நனிசேர் வாழ்வின்று குற்றுயிராய்த் போகுது!

நகுலா சிவநாதன் 1847

Author: