” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

வேண்டாத போரும் தீண்டாத பழியும்

நகுலா சிவநாதன்
வேண்டாத போரும் தீண்டாத பழியும்

வளைகுடா யுத்தம் வாட்டுது மக்களை
தலையெடுத்து வாழத் தடையாக இருக்குதே!
நீநான் போட்டி நிலைக்குமா? என்றும்
நீதியும் இன்றி நேர்மையுமின்றி
நிர்மூலமாகும் நகர அழிவுகள்.

வேண்டாத போரும் தீண்டாத பழியும்
பூண்டிருக்கும் வேடம் புதுப்புது அர்த்தம்
வாழக் காத்திருக்கும் மக்கள் விழிகள்
சோர்ந்திருக்கும் நிலையை யார்தான் எண்ணுவார்?

அதிருது கட்டிடம் அடைமழையாய் குண்டுகள்
பதியும் தரைமட்டம் பலரும் அவலக்குரல்
புதிரும் போட்டு ஆட்டமும் தொடருது
வதியும் இடங்கள் வரலாறாய் பதியுது

எரிபொருளும் எண்ணெயும் அழியுது அங்கு
ஏமாற்றம் பலருக்கு வாழ்வே போராட்டம்
பயணங்கள் தடையாகுது பயணிகள் ஏமாற்றம்
நனிசேர் வாழ்வின்று குற்றுயிராய்த் போகுது!

நகுலா சிவநாதன் 1847

Author: