பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

“முதுமை போற்றி போற்றி”

நேவிஸ்பிலிப் கவி இல(579)

பண்பட்ட நிலமாய் பலன் தந்து
பல்லாண்டு வாழ்வில் நிழல் தந்து
நரை என்னும் முதுமை முடி சூட
திரையென முளைத்தது முதுமை

அநுபவ விருட்சங்களாய்
பண்பாடுகளின் இருப்பிடமாய்
ஆயுள் நீட்சியின்அடையாளமாய்
குடும்பத்தின் பல்கலைக் கழகமாய்

இவர்களின் நினைவுப் பெட்டகங்களில்
புதைந்து கிடக்கும்
பழங்கால நினைவுகள்
பாதுகாக்கப்பட வேண்டிய
பொக்கிசங்கள்

இவர்கள் பூமிக்கு சுமையல்ல
பூமியைச் சுமந்து நின்ற
கடந்த கால சுமை தாங்கிகள்
நம் வாழ்க்கையில் கிடைத்த வரங்கள்

நம் இல்லத்தின் நாளாந்த
வாசிப்பிலும் நேசிப்பிலும்
நம்மோடு கூட இருக்க வேண்டிய
ஜீவ காவியங்கள் எனவே
முதுமையை போற்றுவோம்
வீட்டிலும் நாட்டிலும்
நன்றி

Author:

செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

Continue reading