” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

“முதுமை போற்றி போற்றி”

நேவிஸ்பிலிப் கவி இல(579)

பண்பட்ட நிலமாய் பலன் தந்து
பல்லாண்டு வாழ்வில் நிழல் தந்து
நரை என்னும் முதுமை முடி சூட
திரையென முளைத்தது முதுமை

அநுபவ விருட்சங்களாய்
பண்பாடுகளின் இருப்பிடமாய்
ஆயுள் நீட்சியின்அடையாளமாய்
குடும்பத்தின் பல்கலைக் கழகமாய்

இவர்களின் நினைவுப் பெட்டகங்களில்
புதைந்து கிடக்கும்
பழங்கால நினைவுகள்
பாதுகாக்கப்பட வேண்டிய
பொக்கிசங்கள்

இவர்கள் பூமிக்கு சுமையல்ல
பூமியைச் சுமந்து நின்ற
கடந்த கால சுமை தாங்கிகள்
நம் வாழ்க்கையில் கிடைத்த வரங்கள்

நம் இல்லத்தின் நாளாந்த
வாசிப்பிலும் நேசிப்பிலும்
நம்மோடு கூட இருக்க வேண்டிய
ஜீவ காவியங்கள் எனவே
முதுமையை போற்றுவோம்
வீட்டிலும் நாட்டிலும்
நன்றி

Author: