கண்களில் செந்நீர்-3007 ஜெயா நடேசன்

கார்த்திகை மாதம் கண்களில் செந்நீர் சொரிந்த காலம் உறவுகளை பிரிந்து அலைந்த காலம் போர் கால சூழலிலே முள்ளிவாய்க்கால்...

Continue reading

பேரிடரின் துயரமே (741) 04.12.2025

செல்வி நித்தியானந்தன் பேரிடரின் துயரமே காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டதே சோதனை கலங்கிய மானிடரின் கண்ணீரின் வேதனை காற்றுடன்...

Continue reading

இரா விஜயகௌரி

வெறுமை போக்கும் பசுமை…….

பசுமை போர்த்தும் மகளாள் -இவள்
எழிலின் வனப்பே. உயிர்ப்பூ
வளங்கள் நிறைத்த பேரெழிலை
வழங்கிடும் அழகே வளர்ச்சி

நீர்மகள் நிலமகள் இணைந்து
எழுதிடும் காவியம் பசுமை
உயிர்த்தீ. வதைத்திடும் வறுமை
அதை களைந்திடும் வேரே பயிர்தாம்

வெறுமையை. மனதுள் விதைக்கும்
வறுமையின் நிலைதான் முடக்கம்
சிறுமைகள். களைந்ததோர் சீர்தான்
செழித்தெழும் பெருவளம். பசுமை

தினமும். ரசித்திட. வைக்கும்
பலமும் திடமும நிறைக்கும்
வளங்களை வார்த்தெழும். செழுமை
அங்கு நிலைபெறும். வாழ்வியல் வளர்ச்சி

மண்ணும் நீரும். மலரும் செடியும்
உறவின் பிணைப்பை. வரைந்து
உலகின் உயிர்களை உயிர்ப்பொடு. ஏற்று
இருகரம் தாங்கிடும் புரட்சித்தளையே பசுமை

Nada Mohan
Author: Nada Mohan

    தியாகம் செல்வி நித்தியானந்தன் தமக்கென வாழாது பிறருக்காய் உயிரை மண்ணுக்கு அர்ப்பணித்த வீரரின் பெருந்தியாகம் தலைவனின் பேச்சு தாரக மந்திரம் தரணியில்...

    Continue reading