அகத்தினில் இன்பமே

செல்வி நித்தியானந்தன் அகத்தினில் இன்பமே ஆறுவார விடுமுறை ஓடியே சென்றதே ஆளுமை குறைந்து முடங்கிகே போனதே தாயகம் என்றதும் தனக்குள்ளே மகிழ்ச்சி தன்இயல்பு மறந்து தள்ளாடும்...

Continue reading

இரா விஜயகௌரி

பிரியாத உறவுகள்

விரியாதகனவுகளோடு
நித்தமும் பயணிக்கும்
பிரியாத உறவுகள் அவை
புரியாத நேச இழைவெழுத

அழியாத வலைப்பின்னல் ஆங்கே
மொழியாத. உணர்வுகளை
விழியால் குழைவெழுத-நித்தம்
அழையா விருந்தாளி. போலிவர்

சொரியாத மலராய் சொரிந்தபடி
வரைகின்ற. மலர்வில் மனம்மகிழ
எழிலாகும். விடியலே. -நம்மை
உரிமைக்குரலாய் உயிர்ப்பிக்கும்

பரிவோடு. கரைகின்ற பாசமும்
பழகிடில் கனிந்திடும் நேசமும்
வேஷமே. இல்லாத காதலும்
அன்பின் பரிமாணப்புதையல்களாம்

ஆம். குழந்தைகள் எழுதும் உயிர்ப்பினில்
அடடா வானவில். பேரெழில் மொழிந்திட
எத்தனை அழகியல் உறவிலே
பிரியாத வரமாகும் தலைமுறை

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading