19
Mar
19
Mar
கவிதை என்றாலே….:
ரஜனி அன்ரன் ( B.A)....கவிதை என்றாலே.... 19.03.2026
அழகியலின் அற்புதக்கூடம்
ஆழ்மனதின் ஆத்மார்த்த உணர்வோட்டம்
ஆன்மாவின் ஆத்மீகராகம்...
19
Mar
“முதுமை போற்றி போற்றி”
-
By
- 0 comments
நேவிஸ்பிலிப் கவி இல(579)
பண்பட்ட நிலமாய் பலன் தந்து
பல்லாண்டு வாழ்வில் நிழல் தந்து
நரை என்னும்...
இரா விஜயகௌரி
நன்றியோடு சில வார்த்தை………
கடும் பசி பட்டினி வாடிய குழந்தை
வழி தெரியா. பாதை ஏக்கத்தின் நொடிகள்
தெளிவில்லா. எதிர்காலம்
திசைநோக்கும். பேரிடிகள்
சூறாவளிக்குள் ஓர் வாழ்வுப்பயணம்
களவு கூட பசியில் களவாடப்பட
நடுங்கிய விரல்களுள் பதுங்கிய உணர்வு
குழந்தையின் தன்மானம் போய்விடுமோ
காத்துக்கனிந்த. பரிவான உங்கள் கரம்
வேர்த்துக் கிடந்த உணர்வுக்கு காற்றாக
பரிவோடு காட்டிய திசையில்-உங்கள்
மனித நேயம் உயிர்கலந்தது
வாழக்கைப் பாடமிது. பரிவோடிருங்கள்
பகுத்தறிந்து கணத்தில் வார்ப்பிடுங்கள்
ஏழைகள் உருவாவது காலச்சுழலினாலும் தான்
வெந்து மடிவது. இரந்தவனை இறப்பிடிலும்போது
உணர்வுகள் செத்து உயிர்வாழ்வேது
வாழக்கை குறுகியது வளமாக்க உரமிடுவோம்
இறப்பிலும் இறவாது இனிய செயல்கள்
இரப்பவன் இல்லாதவனல்ல கொடுப்பவன்இழப்பவனுமல்லவே
Author: Nada Mohan
18
Mar
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
அன்னை
தரணியில் தாய்க்கு
நிகர்யாதும் உண்டோ
தற்பெருமை இல்லா
காத்திட்ட தெய்வம்
அழகுபெற்ற வதனம்
பழகுவதும் உறவாய்
அன்பிலே இருப்பிடம்
பண்பிலே மேலானவர்
எட்டுமகவுகள்...
16
Mar
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
மூத்தோர்...
உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள்
உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள்
தளர்ந்தே இன்று தள்ளாடும்...
15
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
17-03-2025
நரைத்த முடியே ஞாலத்தின் சுடரே
உரைத்த மொழியே உலகின் நெறியே
உமக்கிணை அறிவுரை தர...