இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

இரா.விஜயகௌரி

சுதந்திரமாமே…………

சுந்தர எழிலாய் சிறகு விரித்து
எல்லைகள் இல்லா தடங்களைத் தொட்டு
காற்றின் அணுக்களில் காவியம் படைத்து
வெற்றி கொள்வதே சுதந்திர மாண்பு

கொடுப்பதும்பெறுவதும் பறிப்பதும்-பின்
அடக்கியும் அடங்கியும் முடங்கியும்
முனகித்தவித்தலைவதும். இவைதாம்
அடிமைத்தளையின் ஆணவப்பிடியோ

எனக்கென உள்ள உரிமைகள் தம்மை
நானே உணர்ந்து நானிலம் தொடுகின்
தடைகளை இடவும் தாண்டிட விளைவதும்
சுதந்திரச்சிறகுகள் அரிவதன் நிலையோ

உணர்ச்சிப் பிழம்பில்உழல்வது அல்ல
உலகின் பரப்பினைஉள்வாங்கி எழுவதும்
வேரிடம் தொட்டு விரிந்து வாழ்வதும்
எண்ணம் விரிய ஏற்றம் படைப்பதும்
சுதந்திரச் சிறகதன் செறிவே என்பேன்

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading