மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

இரா விஜயகௌரி

நிலைதடுமாறுகிறேன்………

ஆம் வெள்ளி நரை
நடுங்கும் விரல்கள்
தள்ளாடும் கால்கள்
பலமிழந்து போனேனோ

நேற்றுவரை திடமாய்த்தானே
நிமிர்ந்து எழுந்து கணமும் ஓடி
கனவிலும் வேலை வேலையென
ஓடியதால் களைத்ததோ என்னுடல்

எனியென்ன செய்ய முடியாத போது
இதயம் கனக்கிறது பிள்ளை ஒருவழி
பெண்மகளோ தனிவழி அவர் வாழ்வின் வழி
கலங்கிய விழி கருமணி சும்ப்பதேது

இனி காத்துக் கிடந்து கரைவதால்
ஏதுபயன் என்சுமை சும்ப்பது நான்தானே
ஏன் உணரமறந்து தேவைகளின் தேடலில்
கரைந்து போனது வாழ்க்கையல்லவா

எதை மறந்தேன் எதை இழந்தேன்
களைந்ததும் களைத்ததும் எங்கே
ஏதேனும் எனக்காய் செய்தருக்கலாமோ
விரல் நடுங்க வியர்க்கிறது என்ன செய்ய…….

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading