இரா.விஜயகௌரி

ஆகா வியப்பின் விழிகள்……..

வசப்படும் மொழிதனில்
விசையொடு மொழிதலில்
திசைகளை. வென்றிவள்
அசைந்தெழுந்து இசைகிறாள்

வெளிப்படு திறன்மனில்
ஆளுமைச்சரிதமாய் -தன்
தாய்மொழித்தமிழவள்
குழந்தையாய். தவழ்கிறாள்

அன்னை அபிராமி குழந்தையோ -இவள்
அழகு தமிழன்னை. தோழியோ
வென்றாழும் செயற்திறன்
நின்றாளத். தொடர்கிறாள்

திடம்கொண்டாளும். தனித்திறன்
அதை தொடர்ந்தெழுதும். வினைத்திறன்
வேக விவேகத்தின். மொழித்திறன்
செயல்முனைப்பெழுதும். உயர்திறன்

சின்னவள் விழிகளி்ல் ஒளித்திரள் மின்ன
பெரியவள் இவளென உயர்வுள்ளல் எழ
வியப்பொடு வியப்பொடு பெருவாழ்த்து
ஆயிரம் தடமென்ன பல்லாயிரம்தடம் தொடுக……

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

    Continue reading