இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

இரா.விஜயகௌரி

கரையும் தண்ணீரில்
நிறையும் கழிவுகள்……..

கரையும் தண்ணீரில்
நிறையும் கழிவுகளால்
கரையும் வாழ் பொழுதை
உரைக்காதோ வாய்மொழிதாம்

உறைக்கப் பேசுங்கள்
உணரச் செயல் தொடுங்கள்
உரைக்கும் மொழி தன்னால்
கரையட்டும் கழிவின் நெடி

நீர்வளத்தைக் கழிவாக்கி. அங்கு
கழிமுகத்தை வளமழித்து. நாம்
நிதச்செயலால். சுரண்டுகிறோம்
நிர்மலத்தை அழிப்பவர் நாம்

குழந்தைக்கும் செயல் மூலம்
வாழ்நிலையை உணர்த்தி எழின்
பூமிமகள் செழிப்பெழுத -நாம்
உயிர் கொடுக்கும் வரம் அமைப்போம்

நிறையட்டும் பெருவளநீர்
குறையட்டும். கழிவின் நிறை
வளமுள்ள பூமித்தாய்
இயற்கையெழில் சொரியட்டும்

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading