சத்தமின்றி சாதனை செய்

இரா விஜயகௌரி வித்தகத்தை விரல் நுனிக்குள் வைத்தெடுத்தா படைத்தான் உரசி எழும் பொழுதெல்லாம் தடம் பதித்து சாதனை செய் குடும்பத்து...

Continue reading

இரா.விஜயகௌரி

கரையும் தண்ணீரில்
நிறையும் கழிவுகள்……..

கரையும் தண்ணீரில்
நிறையும் கழிவுகளால்
கரையும் வாழ் பொழுதை
உரைக்காதோ வாய்மொழிதாம்

உறைக்கப் பேசுங்கள்
உணரச் செயல் தொடுங்கள்
உரைக்கும் மொழி தன்னால்
கரையட்டும் கழிவின் நெடி

நீர்வளத்தைக் கழிவாக்கி. அங்கு
கழிமுகத்தை வளமழித்து. நாம்
நிதச்செயலால். சுரண்டுகிறோம்
நிர்மலத்தை அழிப்பவர் நாம்

குழந்தைக்கும் செயல் மூலம்
வாழ்நிலையை உணர்த்தி எழின்
பூமிமகள் செழிப்பெழுத -நாம்
உயிர் கொடுக்கும் வரம் அமைப்போம்

நிறையட்டும் பெருவளநீர்
குறையட்டும். கழிவின் நிறை
வளமுள்ள பூமித்தாய்
இயற்கையெழில் சொரியட்டும்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading