மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

இர.விஜயகௌரி

அம்மா. பேசலாமா………..

பாலக பருவம் பழகிடும் குழந்தை
இனிதாய் தொட்டும் எடுத்தும்
தொடர்ந்திட. மலர்ந்தும்-தினம்
எழலாய் மகிழ்ந்திடும் நொடிகள்

உனக்குள் கருவாய் புதைந்தவள் யான்
புதையலாய் மகிழ்வாய் என்றிருந்தேன்
புதருள் சருகாய் அல்லவா எந்தனை
விட்டு மறந்து விடலையைக் கடந்தாய்

நோயின் பிடியில் சுழன்றவர் அப்பா
இருந்தும் பாசக் கயிற்றால் இறுக்கி
பரிதவிப்பை என்னுள் கடத்தி -என்னை
இறுதி நொடியிலும் தவிக்க வைத்தார்

பசியில் துடித்த அந்த நிமிடங்கள்
பாசத்தை தேடிய இறுதிக் கணங்கள்
தோற்றது நானல்ல அம்மா உங்கள்
மனித நேயமும் மானுடக் கடமையும்

உன் போன்ற பெற்றவர்க்கு
எதற்கு எதற்காக குழந்தைகள்
கருவினில் அழித்தாவது எங்களுக்கு
கதறி அழும் பேரிடியை தாராதிருங்களேன்

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading