இ.உருத்திரேஸ்வரன்

கவிதை 204
தியாகமே தீர்ப்பானதோ

தியாகம் இருந்தால் முன்னேறும் சமுதாயம்
வீணானதா எம் சமுதாயத்தில் தியாகம்
எமக்குள்ள சாபமா புரியவில்லை
எல்லாம் விழலுக்கிறைத்த நீரா

பிள்ளைக்காக தாய் செய்யும் தியாகம்
கணவனுக்காக மனைவி செய்யும் தியாகம்
மண்ணுக்காக மக்கள் செய்த தியாகம்
வீனானதோ எம் இளையவர்களின் தியாகம்

தம்நலம் மறந்து செய்த தியாகம்
எம்மிளையோரின் திறமையை கண்டு
வியந்ததா இவ்வுலகம் தீர்ப்பானதா
தியாகம் வீணாக்குவது என்று

நன்றி
வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

    Continue reading