மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

இ.உருத்திரேஸ்வரன்

கவிதை 210
ஒளியின்றி ஒளிர்வெங்கு
உறவை தேடும் உறவினர் மத்தியில்
ஒளிக்கீற்றையே காணவில்லையே
ஒளிர் எங்கு வரும் என்பதே கேள்வி
காலங்கள் கழிவது தான் நியதி

ஒளி இல்லையெனில் ஒளியேற்றி
எம் வேலையை செய்வதுபோல்
சூரியஒளி மறைந்து இருள் சூழ
தெருவெங்கும் செயற்கையாக ஒளிருதே

காசாவில் இரவு பகலாய் ஒளிருதே
ஆனால் மக்கள் அழிவுதான் தெரியுதே
ஒழிய ஒளிர்வு எங்கே என்று
தேடுதே உலகம்
நன்றி
வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading