இ.உருத்திரேஸ்வரன்

கவிதை 220
தனிமை

நாமே அதை எடுத்துக்கொண்டால்
மிகவும் இனிமையாக இருக்கும்
நமக்கு மற்றவர்கள் கொடுத்தால்
இருக்கும் அது கசப்பாக

சிறந்த ஆசானாய் உற்ற நண்பனாய்
பல பாடங்களை கற்றுத் தரும்
நான் யார் என புரிய வைக்கும்
தன்மை உண்டு தனிமைக்கு

தனிமை என்னை கொல்கிறது
கொடுமை என புலம்புவோர்
தனிமையில் இனிமை காணப்பழகினால்
அதுவும் இன்பமான உலகமே

கருவறையின் அமைதியையும்
நிம்மதியையும் தருவது தனிமை
பல வெற்றிக்கு ஆணிவேராய்
படைப்புகள் தோன்றுமிடம் தனிமை

நன்றி
வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

    Continue reading