மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு……

இரா விஜயகௌரி இனிதாம் வாழ்வியல் பயணத்தொடரில் இடரெனச் சூழ்ந்திடும் நோயின் தொடுப்பு காற்றினில் மூச்சாய் கலந்திடும் கிருமி உள்துளைபுகுந்து...

Continue reading

இ.உருத்திரேஸ்வரன்

கவிதை 188
ஆகா வியப்பில் விழிகள்

தான் படிக்கா விட்டாலும்
தனதும் தமக்கையின் சேய்களையும்
கொழும்பில் படிக்க வைத்து உயர்த்திய
சிறியதாயார் அன்னலட்சுமி சிவதாசனே

தமக்கை இறந்ததும் கைம்பெண்ணாக
பெற்ற பிள்ளைகளோடு ஐந்து பெறாமகள்களையும்
சேர்த்து வளர்த்த திறமை கண்டு
இன்றும் வியப்பில் எனது விழிகள்

கணவனின் ஓய்வூதிய பணத்தில் தெகிவளையில்
கஞ்சிகுடித்தாவது பிள்ளைகளின் உயர்வில்
மகிழும் சின்னம்மாவுக்கு என்
மனமார்ந்த நன்றியும் சமர்ப்பணம்

நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading