தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

உயிரில் கலந்து உணர்வில் உறைந்தவர்கள்

ஜெயம் தங்கராஜா

கவி 750

உயிரில் கலந்து உணர்வில் உறைந்தவர்கள்

தியாகம் உருவங்கொண்டு கண்ணெதிரே உலவியது
வீரம் வெளிப்பட்டு இவர்களால் பெருமையடைந்தது
விடியலுக்காய் வடிவெடுத்த ஊரறிந்த உன்னதர்கள்
மரணித்தும் மரணிக்காத மாட்சிமை கொண்டவர்கள்

போர்க்களமே வீடானது போராட்டமே வாழ்க்கையானது
கண்ணுக்குள் தாயகக்கனவு இலட்சியம் மூச்சானது
உறுதியான மனங்கொண்டவர்கள் வலிகளையும் வழிகளாகினார்
இவர்கள் அற்புதமானவர்கள் அற்புதங்களாகவே நிகழ்த்தினார்கள்

தம்மைவிட தம் இனத்தை நேசித்தவர்கள்
மண்ணை மீட்க கந்தகக்காற்றை சுவாசித்தவர்கள்
அச்சத்தை விட்டகற்றி உச்சத்தை தொட்டவர்கள்
சந்ததிக்காய் தந்துயிரை வரலாறு கண்டவர்கள்

அங்கங்களை இழந்திருந்தும் ஓய்வென்று ஒதுங்கவில்லை
தங்களை அர்ப்பணிப்பதில் பின்தங்கியதும் இல்லை
அல்லும் பகலும் மண்ணுக்கான உழைப்பு
எல்லைதனை காத்தங்கே சாமியாக நிலைப்பு

மறவர்களை நினைவுகூரும் கார்த்திகை மாதமிது
மறக்காது அவர்களை மீட்டிக்கொள்ளும் மாதமிது
எல்லாப் புகழுக்கும் உரித்தானவர்கள் அவர்களே
உள்ளவரை தமிழினம் மறக்காத செல்வங்களே

ஜெயம்
21-11-2024

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

Continue reading