அதிகரிக்கும் வெப்பம்

நகுலா சிவநாதன் அதிகரிக்கும் வெப்பம் கோடை வந்தால் கொள்ளை மகிழ்வு வாடை குறையும் வசந்தப்பொழுதாய் வேளைதோறும் வெப்ப விடியல் வேண்டும்...

Continue reading

உருகுவது மெழுகுவர்த்தியா?..

சிவதர்சனி இராகவன்
வியாழன் கவி 2121

உருகுவது மெழுகுவர்த்தியா..

உருகுவதும் உணர்வினில்
கரைவதும் நீ மட்டுமா
கருகுவதும் களங்கம்
சுமப்பதும் மனசு இல்லையா
ஏங்குவதும் எச்சரிப்பதும்
அனுபவம் தொல்லையா
அடடா யாவுமே மானிட
வாழ்வில் இல்லையா..

வளர்பிறையாகும் பின்
தேய்பிறை போலும் நிலவு
தளர்வதால் தயங்கியே
பின் செல்வதே அன்பாம்
எப்படி வரும் எப்போ
யார் வடிவில் கிடைக்கும்
அறியோமே புரியோமே..

ஏங்கித் தவிக்கும் உணர்வில்
ஏழ்மை வசதி ஏதப்பா
கைகள் நீட்டி அழைக்கையில்
சரணாகதி தானப்பா
முடிந்துவிடும் சட்டென நம்
வாழ்வியல் தெரிந்திடப்பா
முத்தாய் மகிழ்ந்தே நிதமும்
அன்பில் மூழ்கிடப்பா…
சிவதர்சனி இராகவன்
11/3/2025

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 24-06-2025 வண்ணப் பெண்ணவளாய் வாஞ்சையோடு உலாவருவாள் குடும்பமென அர்ப்பணித்து குலவிளக்காய் சுடர்விட்டாள் வாழ்நாள் முழுதும் உழைத்து வானம்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் செல்லாக்காசு புவனத்தில் பலநாட்டின் நாணய மதிப்பு புழங்கிடும் பல்வேறு நாமத்தின் சிறப்பு பலநாட்டின் பணத்தால் பாரிய விரிசல் பதுக்கிய...

Continue reading