உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார் முன்னே

அகநாநூறில் அன்பு பேசுகிறது
புறநாநூறில் வீரம் பேசுகிறது
மக்கள் சங்ககால வாழ்வை
அணுகி வாழ்வதா இல்லை
இன்றைய சூழலுக்கேற்ப
வாழ்வை அமைப்பதா
எனத்தடுமாறுகையில்
வென்றது என்னவோ
இக்கால வாழ்க்கை முறையே
சொந்தங்கள் அருகிருந்தால்
சொர்க்கமாகும் அருகாமை
உறவுகளுக்குள் பிரிவினை
ஏற்பட்டால் நரகமாகும்
ஒவ்வொருவரின் குணாதிசயங்கள்
அவரவர் மரபணுவைப்
பொறுத்தே இருக்கும்
அதன்படியே அவர்நடப்பர்
இன்றைய சூழலில்
மனிதர்கள்
உள்ளொன்று வைத்து
புறமொன்று பேசுகிறார்
பேசுவது தெரிந்தும்
பொறுக்கின்றோம் அவர்செயலை
நேரே அவர். பிழையை
சுட்டிக் காட்ட முடியாது
சுட்டினால் பொறுக்காது
வெட்டி விடுவார் உறவை
நேரே பேசினால் பொல்லாதவர்
பின்னால் பேசுபவர் நல்லவர்
இதில் யார் வல்லவர்
புறமுதுகு காட்டா பரம்பரையில்
வந்த நாம் புறம்பேசுதல்
தகுமா
புறம்பேசி மற்றவர் மனதில்
ரணமாக்காதீர்
இனியாவது மக்கள் திருந்து வார்களா!

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

Continue reading