பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

உழைக்கும் உழைப்பாளிகள்

“ உழைக்கும் உழைப்பாளிகள் “ கவி….ரஜனி அன்ரன் (B.A) 02.05.2024

வியர்வை சிந்தி உழைக்கும் உழைப்பாளிகள்
உலகின் சுமையைத் தாங்கும் தூண்கள்
உங்கள் உழைப்பே உலக வாழ்வு
உழைப்பினால் மலர்கிறது எங்கள் வாழ்வு
உழைப்பினை மேன்மையாக்கும் தினமாம்
உழைப்பாளிகள் தினத்தில் உங்கள் நிலையினை
உன்னத தியாகத்தை நினைக்கிறோம் நாமும் !

உலக வரைபடத்தை காட்டுமே உங்கள் கைரேகை
உழைப்பைக் காட்டுமே கூன்விழுந்த முதுகும்
களையிழந்த முகமும் காய்த்துப் போன கைகளும்
சேற்றுவயலில் சாலையோரத்தில் சாக்கடைகளிலென
காற்றோடு காற்றாக உழைக்கும் உழைப்பாளிகளே
உங்கள் உழைப்பிற்கு விலை ஏதுமில்லை
உங்களுக்கு எதிரான சுரண்டல்களோ ஏராளம்
உங்கள் உழைப்பினைப் போற்றுகின்றோம் நாமும் !

குறைந்த ஊதியத்தினைக் கொடுத்து
நிறைந்த வேலையினை வாங்கி
உழைப்பும் உழைப்பவர் நிலையும் பரிதாபமே
உன்னத உழைப்பாளர்களே
உலகை ஆழும் வர்க்கம் நீவிரே
உரிமையோடு ஒற்றுமையாய் போராடுங்கள்
வெற்றியின் இலக்கு நிட்சயமே !

Nada Mohan
Author: Nada Mohan

அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

Continue reading