உழைப்பின் மகத்துவம்

கவி இல (132). 02/05/24
உழைப்பின் மகத்துவம்

மனிதனின் மகத்துவம்
உழைப்பென்றால்
உண்மை உழைப்பு
மேன்மையுடைத்ததாய்

உண்ணும் உணவு
ஒரு கைப்பிடியாயினும்
குடிப்பது கூழாயினும்
உன்னுழைப்பு இருந்திடின்
உலகில் உயர்ந்தவன் நீயன்றோ

மண்ணில் தோண்டி
புதையலெடுத்தாலும்
விண்ணைத்தாண்டி
சாதனை புரிந்தாலும்

ஒரு சாண் வயிற்றுக்காய்
ஓடி உழைத்து
உண்ணும் உணவே
உடலில் செறியும்

கண்ணும் கருத்துமாய்
ஓய்வுன்றி உழைத்திடின்
தொய்வின்றி என்றும்
நிமிர்ந்து நிற்கலாம்
நன்றி வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan

வசந்தா ஜெகதீசன் பூமி.... சுற்றிச் சுழலும் சுவாசமே சுதந்திர தேசம் ஞாலமே பற்றிப் படரும் வாழ்க்கையில் பயணம் செய்யும் படகிது தத்தி...

Continue reading

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம்_208 "பூமி" சுற்றும் பூமி சுழலும் பூமி பூ கோளம் யார் போட்ட கோலம்! அம்மா என்னை சுமந்தாள் கண்ணியமாய் கருணை...

Continue reading