மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

எல்லாளன்

“தீயோர்க்கு உதவுதல் தீது”
செங்குத்து மலை உச்சி ஒன்றில் அன்ன கூட்டம்
சேர்ந்து ஒன்றி வாழ்ந்தனவாம்
இல்லை பயம் வாட்டம்
தங்கியுள்ள அவற்றை வேடர் வேட்டையாட நாட்டம்
தாம் கொண்டு தோற்றனராம்
முயற்சி பல போட்டும்
எங்கிருந்தோ ஒரு புயல் நாள்
மலைக்கு வந்த காகம்
இடம் கேட்டு கெஞ்சியதாம்
இரவு தங்க மட்டும்
தங்க இடம் இரங்கி தர எச்சம் போட்டு விட்டு
தான் காகம் திரும்பியதாம்
நன்றி கூறி விட்டு”

***
“எச்சத்தில் இருந்து ஆலம் விதை விருட்சம் ஆக
இவை விட்ட விழுதுகளோ மண்ணை நோக்கி வீழ
பட்சிகளை விழுதில் ஏறி வேடர் வேட்டை யாட
பரம்பரையே இல்லாமல் அன்னக்கூட்டம் மாள
துட்டருக்கு இரங்கி அன்னம்
உதவி செய்ய போக
துயங்கள் அழிவு இந்த கதை
உணர்த்து. மாக
எட்ட வைப்போம் தீயோரை
மனம் இரங்கியேனும்
இணைத்திட்டால் அன்னத்தின் கதி
எமக்கும் நேரும்”

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading