அகத்தினில் இன்பமே

செல்வி நித்தியானந்தன் அகத்தினில் இன்பமே ஆறுவார விடுமுறை ஓடியே சென்றதே ஆளுமை குறைந்து முடங்கிகே போனதே தாயகம் என்றதும் தனக்குள்ளே மகிழ்ச்சி தன்இயல்பு மறந்து தள்ளாடும்...

Continue reading

எல்லாளன்

அன்றொரு நாள் அதிகாலை வரையும் வேலை
அயர்ந். துகங்கி திடுக்குற்று
எழுந்த வேளை
என்றனது பல்பிடுங்க பதிந்த நேரம்
இன்னும் சில நிபிடத்தில் என்று நானும்
அந்தரமாய் தயாராகி பல் டாக்குத்தர்
அமைவிடத்தை சேர பெயர் அழைக்க கேட்டேன்
வந்தமரும் வாய்திறவும் என்று அன்பாய்
வலி தந்த கடைவாய் பல் பிடுங்கி விட்டார்.

**
வீட்டுக்கு திரும்பி உடன் குளிக்கப் போனேன்
வியர்படைந்தேன் என் தோற்றம்
பார்த்து நானே
போட்டபடி பற்பசையும் பிறஸ்சின் மேலே
புறப்படு முன் பல் துலக்க மறந்த தாலே
ஈட்டி முனை போல் நரைகள் நாடி ஓரம்
இவற்றோடு வாய் நாற்றம் சகித்தவாறே
ஆட்டி மிக ஆறுதலாய் பல்லை பெயர்த்த
அவர் பண்பை வியர்ந்தேன் கண் நீரை தேக்க.

தலை முழுகி மயிர் வெட்ட போவோமானால்
சலூன் காரன் பணி செய்வான் தானே
சீராய்
பலர் சூழும் பஸ் ரயிலின் பயண வேளை
பண்பாடு உடல் சுத்தம் பேணல் தேவை
அவை தோறும் உணவுக்கு வரிசை சீரை
அரங்குகளில் சத்தங்கள் எழுப்பா சீரை
இவை போன்ற பொது ஒழுக்கம் பேண லாமே
இவன் நல்லோன் எனும் பேரை பெறலாம்தானே!

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading