மெல்ல துளிர்க்கும் வசந்தம்

நகுலா சிவநாதன் மெல்ல துளிர்க்கும் வசந்தம் மெல்ல துளிர்க்கிறது வசந்தம் மேனியை சிலிர்க்க வைக்கும் காற்று செல்லமாய் அழைக்கும்...

Continue reading

ஒரு வழி பாதை

இ.உருத்திரேஸ்வரன்

கவிதை 226
ஒரு வழி பாதை

சொர்க்கமோ நரகமோ வாழ்க்கை
போகிறது ஒரு வழிப்பாதையாக
திரும்பிப் பார்க்கலாமே ஒழியே
நடக்க முடியாது திரும்பவும்

மலையில் உருவாகும் அருவி கூட
ஆறாகும் ஒரு வழிப்பாதையாய்
கடலில் கலந்தாலும் திரும்ப
வர முடியா ஒரு வழிப்பாதை

காதலும் சிலருக்கு ஒரு வழிப்பாதை
அதே வழிப்பாதையில் மரணமும்
செல்லும் தூரமோ வெகு அருகில்
நன்மை செய்து வாழ்வோமே

நன்றி
வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் முதன் முதலாக முயற்சி பதிலுக்குப்பதில் பயிற்சி எதிலும் உயர்ச்சி பெறப் போட்டி உயிரானந்தமே ஐந்தோ அறியாப் பருவம் பதினைந்து...

Continue reading