ஒரு வழி பாதை

இ.உருத்திரேஸ்வரன்

கவிதை 226
ஒரு வழி பாதை

சொர்க்கமோ நரகமோ வாழ்க்கை
போகிறது ஒரு வழிப்பாதையாக
திரும்பிப் பார்க்கலாமே ஒழியே
நடக்க முடியாது திரும்பவும்

மலையில் உருவாகும் அருவி கூட
ஆறாகும் ஒரு வழிப்பாதையாய்
கடலில் கலந்தாலும் திரும்ப
வர முடியா ஒரு வழிப்பாதை

காதலும் சிலருக்கு ஒரு வழிப்பாதை
அதே வழிப்பாதையில் மரணமும்
செல்லும் தூரமோ வெகு அருகில்
நன்மை செய்து வாழ்வோமே

நன்றி
வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading