16
Apr
இல 83
வீட்டின் காவலன் நாய்
காலை கடிக்காது காசும்
கேட்காது. வாலை...
16
Apr
மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு
-
By
- 0 comments
மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு
ஜம்பூத கொடைசேர்ந்து
அற்புத வரமாக...
16
Apr
” அடையாளத்தின் முகவரி “
ரஜனி அன்ரன் (B.A) " அடையாளத்தின் முகவரி " 16.04.2026
குரலென்பது வெறும்...
ஒளவை
நாரைவிடு தூது…
————————-
கவ்விய மீனைக்
……காவியே செல்லும்
செவ்வாய் நீண்ட
……செங்கால் நாராய்
எவ்விடம் அலைந்தும்
……என்துணை கண்டு
பவ்வியம் கொண்டு
……பகிர்ந்திடு தூது
சாடை மொழியில்
……செப்பினான் காதல்
கோடை வந்திடக்
……கோடி தாண்டினான்
வாடை தீண்டிட
……வாட்டுது தேகம்
பாடை போகுமுன்
……பார்த்திடச் சொல்வாய்
நாடி நரம்புகள்
……நடைப் பிணமாக
வாடி வதங்கியே
……வாட்டுது காதல்
ஆடித் திரிந்த
……ஆனந்த நாட்களை
தேடி அலைகிறேன்
……தேகம் களைக்க
மோகத் தீயோ
……மேகத்தைத் தாண்ட
தாகக் கனலில்
……தவிக்கிறேன் நெருப்பாய்
தேகம் தீண்டத்
……தேவனும் இல்லை
வேகமாய்ச் சென்று
……வேதனையைச் சொல்வாய்.
ஔவை.
Author: Nada Mohan
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...
19
Apr
-
By
- 0 comments
சிவாஜினி சிறிதரன் சந்தம் சிந்து
கவி இல,_229
"வாழ்த்து கவி"
பாமுக பந்தலில்
பார்சுற்றும் தளம்
நாளும் பொழுதும்...