அதிகரிக்கும் வெப்பம்

நகுலா சிவநாதன் அதிகரிக்கும் வெப்பம் கோடை வந்தால் கொள்ளை மகிழ்வு வாடை குறையும் வசந்தப்பொழுதாய் வேளைதோறும் வெப்ப விடியல் வேண்டும்...

Continue reading

ஒளியிலே தெரிவது……

நகுலா சிவநாதன்

ஒளியிலே தெரிவது……

ஒளியிலே தெரிவது ரீங்காரமா?
உணர்விலே முகிழ்ப்பது காந்தளா?
காந்தள் பூவும் கார்காலம் பூக்கும்
கனவும் அங்கே நனவாய் மாறும்

ஒளிரும் அறிவும் விழியில் மலர
களியும் காலம் கனத்து செல்லும்
வழியும் தெரியா வைகறை இருட்டு
விழியும் தேடும் விடியலின் ஒளிர்வை

கார்கால மேகமும் கண்ணீர் பொழியும்
போர்கால மேகமும் பொழிவை உகுக்கும்
நீர்த்தாரை வார்க்கும் மேகமும் அழும்
நித்தியமாய் எம்பிள்ளை ஒளியில் தெரிவானா?

ஏக்கங்கள் தாக்கமாய்ச் சுடர்விட
கார்த்திகையும் தீபமாய் ஒளிர
கண்ணீரின் நடுவே காந்தளும் ஒளிர
காத்திருக்கிறோம் காணாமல் போனவன் வருவானா?
ஒளியிலே தெரிவது நீதானா?

நகுலா சிவநாதன் 1786

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

Continue reading