மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

ஒளியிலே தெரிவது……

நகுலா சிவநாதன்

ஒளியிலே தெரிவது……

ஒளியிலே தெரிவது ரீங்காரமா?
உணர்விலே முகிழ்ப்பது காந்தளா?
காந்தள் பூவும் கார்காலம் பூக்கும்
கனவும் அங்கே நனவாய் மாறும்

ஒளிரும் அறிவும் விழியில் மலர
களியும் காலம் கனத்து செல்லும்
வழியும் தெரியா வைகறை இருட்டு
விழியும் தேடும் விடியலின் ஒளிர்வை

கார்கால மேகமும் கண்ணீர் பொழியும்
போர்கால மேகமும் பொழிவை உகுக்கும்
நீர்த்தாரை வார்க்கும் மேகமும் அழும்
நித்தியமாய் எம்பிள்ளை ஒளியில் தெரிவானா?

ஏக்கங்கள் தாக்கமாய்ச் சுடர்விட
கார்த்திகையும் தீபமாய் ஒளிர
கண்ணீரின் நடுவே காந்தளும் ஒளிர
காத்திருக்கிறோம் காணாமல் போனவன் வருவானா?
ஒளியிலே தெரிவது நீதானா?

நகுலா சிவநாதன் 1786

Nada Mohan
Author: Nada Mohan

பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading