ஆத்மராகங்கள்

சக்தி சிறினிசங்கர் தமிழ்மணம் கமழும் தேசத்தை நேசித்த நெஞ்சங்களில் சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில் துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க மறந்தனர்...

Continue reading

ஔவை

மீண்டெழு………
================
மனதினில் நிகழ்ந்திடும் வெறுப்புகள் விலகிட
மனத்திடம் கருதியே நெருப்பென மீண்டெழு

உனக்குளே உறைகிற நினைவுகள் சுகந்தர
உறவுகள் உறுதியில் நெருப்பென மீண்டெழு

கனவுகள் கலைந்திடா மலர்கிற வழிகளில்
கவிதனில் மிளிர்ந்திட நெருப்பென மீண்டெழு

சினந்திடும் மனிதரைச் சிதைத்திடும் வகையினில்
சிறுத்தையாய் பகையுடன் நெருப்பென மீண்டெழு .

ஒளவை.

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் கல்லறைகள் திறக்கும்..... விடுதலை வேட்கையும் வீரத்தின் உணர்வும் ஓன்றித்த போர்க்காலம் ஓயாத அலை போல அவலமும் அழிவும்...

    Continue reading