தன்னம்பிக்கை 82

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 22-01-2026 சுற்றியிருக்கும் இருள் சூறையாட நினைத்தால் துணிவெனும் தீச்சுவாலை கொழுந்து விட்டெரியட்டும்! விழுந்தால் எழுவாய் விதிதனை வெல்வாய் விடியும்...

Continue reading

கஞ்சா

சிவருபன் சர்வேஸ்வரி

கஞ்சா

காலம் நகர்கின்றது கவலைகள் பிறக்கின்றது
வாழ்வுகள் மலருமென்று மனதிலே உறுதியொன்று
தாழ்வுகள் தேடிவரத் தாய்மனமும் வாடிநிற்க
தேடும் குழந்தைகள் இன்றென்ன கஞ்சா

கஞ்சா கஞ்சா காசினியெங்கும் கஞ்சா
நஞ்சாக வருமென்று கனவிலும் நினையாமல் கஞ்சா
கஞ்சாவும் இல்லையென்றால் வாழ்வும் இல்லையென்பார்
துஞ்சித்து நிற்கின்றனர்
துவண்டுமே விழுகின்றனர்
மிஞ்சிக் கொண்டது சாவிற்கு கஞ்சா

பஞ்சாகப் பறக்கின்றனர் பறந்துமே மோதுகின்றனர்
கஞ்சாவைக் கண்டதும் கரும்பாகச் சுவைக்கின்றனர்
காய்ந்த மாடுகள் கம்பிலே விழுந்தது போல் கஞ்சா
கஞ்சாவும் வேண்டாம் காலனையும் தேடாதே
இச்ச்கொண்டே எமனையும் நாடாதே
கஞ்சாவின் எண்ணத்தை விரட்டிடவும் மாட்டாயா

சிவருபன் சர்வேஸ்வரி

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

Continue reading